THE FIRST ROAR: 'ஜன நாயகன்' படத்தின் அசத்தலான அப்டேட்..!
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்டம் விஜய் பிறந்த நாளான 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்டம் விஜய் பிறந்த நாளான 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு என்பவர் தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.
மதவாத சக்திகள் இந்த பிரச்சினையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில், உக்ரனை சேர்ந்த 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் தலைநகர் கீவ்-ல் வானுயர கட்டடத்தின் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 44-க்கும் மேற்பட்டோர் காயம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை கார் குண்டுவெடிப்பில் வழக்கில், அரபிக் கல்லூரிக்கு வரும் மாணவர்களை குறி வைத்து தீவிரவாத செயலுக்கு பயன்படுத்த முயன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
வைகைச் செல்வன் உடனான சந்திப்பு "நட்பின் அடிப்படையில் நிகழ்ந்தது என்றும் திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்து விட்டது என்று அவர் ஏன் அப்படி சொன்னார் என எனக்கு தெரியவில்லை" என திருமாவளவன் கூறினார்.
திருவண்ணாமலை அருகே விசிக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி விசிகவினர் மற்றும் உறவினார்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தா செல்லும் விமானத்தில் அவசரகால கதவை திறக்க கூடிய பட்டனை அழுத்திய கல்லூரி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ், தமிழர் நாகரிகம் என்பது எரிமலை போன்றது என்றும் கீழடி விவகாரத்தில் வீணாக கை வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தவெக எச்சரிக்கை விடுத்துள்ளது.