K U M U D A M   N E W S

ரூ

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=%E0%AE%B0%E0%AF%82

விஜய்க்குத் தலைமைப் பண்பு இல்லை; மக்களைக் கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறினார் - நீதிபதிகள் காட்டம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கரூர் உயிரிழப்புக்கு விஜய்யே பொறுப்பு; அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் - எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு!

"விஜய் எம்ஜிஆராக முடியாது; அரசியலில் பக்குவம் இல்லை" அவர் ரஜினிகாந்த் போல அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி. சேகர் பகிரங்கமாகக் கருத்து தெரிவித்தார்.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.

"தமிழ்நாட்டை வஞ்சிப்பது பாஜகவின் வாடிக்கை": ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதிப் பகிர்வு மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் குற்றம் சாட்டினார்.

தங்கம் விலை 'திடீர்' சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ₹880 குறைந்து ₹86,720-க்கு விற்பனை!

வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 3) ஒரே நாளில் சவரனுக்கு ₹880 வரை குறைந்து, ₹86,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் சற்று ஆறுதல் அளித்துள்ளது.

ரோகிணி திரையரங்கில் நடந்த சலசலப்பு.. யூடியூபருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டர் கைது!

ரோஹிணி திரையரங்கில், கரூர் விபத்து குறித்துப் பேசிய யூடியூப்பருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டரான கோகுல் என்பவரைச் சிஎம்பிடி போலீசார் கைது செய்துள்ளனர்.

விஜய்க்கு எதிராகப் போஸ்டர் ஒட்டிய இளைஞர் தற்கொலை: த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது: சட்டம்-ஒழுங்கு, மதுவிலக்கு குறித்து ஜி.கே.வாசன் பேட்டி!

ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விஜய் எங்கள் பிடியில் எப்படி இருக்க முடியும்? - கரூர் விபத்து குறித்து நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.87,040-க்கு விற்பனை!

சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளால் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டிருந்த தங்கத்தின் விலை, இன்று (அக். 2) சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.87,040-க்கு விற்பனையாகிறது.

கரூரில் பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா? விஜய்-யின் 'ஒய் பிரிவு' அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விசாரணை!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

கரூர் துயர சம்பவம்: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் - கரூர் துயரம் குறித்து எஸ்.வி. சேகர் கடும் தாக்கு!

நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்

கரூர் துயரம்: ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கேட்ட போலீஸ்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

கரூர் நெரிசல் விவகாரம்: தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - ஐஏஎஸ் அமுதா விளக்கம்!

கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.

மன்னார்குடி அரசு மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) முதல் தொடக்கம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) காலை 11 மணி முதல் தொடங்குகிறது என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

கரூர் துயரம்: விஜய் காலதாமதமும், தவெக குளறுபடிகளுமே காரணம் - திருமுருகன் காந்தி கடும் குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

என் வாழ்வில் வலி மிகுந்த தருணம்; அனைத்து உண்மைகளும் வெளியே வரும் - கரூர் சோகம் குறித்து விஜய் வேதனை!

கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கரூர் விபத்து: தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை - ஆதவ் அர்ஜூனா மௌனம்!

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் சோகத்துக்கு தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - வைகோ குற்றச்சாட்டு!

கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.

TVK தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்: இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3ஆம் கட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் 3ஆம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொள்கிறார்.

புதிய வீடு இடித்து தரைமட்டம் - ஆட்சியரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

ஊராட்சிமன்ற தலைவருக்கு ஆதரவாக வாக்கு செலுத்தவில்லை என்ற காரணத்தால் தூண்டுதல் பேரில் புதிதாக கட்டிய வீட்டை அதிகாரியுடன் இடித்து தரைமட்டம் ஆக்கியதாக குற்றச்சாட்டு

கரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்- வெறிச்சொடி காணப்பட்ட இருக்கைகள்

குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.