K U M U D A M   N E W S

ஜல்லிக்கட்டு குழுக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் - அரசுத் தரப்பு

விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு.. புலன் விசாரணை நடத்த உத்தரவு..!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தொடர்ந்து புலன் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் தொகுப்போடு இரண்டாயிரம் வழங்க கோரிக்கை.. பாஜக மனுவை நிராகரித்த நீதிமன்றம்

பொங்கல் தொகுப்புடன் இரண்டாயிரம் ரூபாய் வழங்க கோரி பாஜக தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

மத்திய அரசை கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம்

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டதிருத்த மசோதா.. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்ட திருத்த மசோதா இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.

சென்னையில் கடல் மேல் பாலம்..அமைச்சர் கொடுத்த அப்டேட்

சென்னை கலங்கரை விளக்கம் - நீலாங்கரை வரை கடல்மேல் பாலம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் ஆய்வு - எ.வ.வேலு

ஈரோடு கிழக்கு - வேட்புமனு தாக்கல் தொடங்கியது

இன்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

தண்டனை அதிகரிப்பு சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா.