K U M U D A M   N E W S

அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு.. 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா கிரிக்கெட் லீக் போட்டி.. அதிக தொகைக்கு ஏலம் போன சஞ்சு சாம்சன்!

கேரளா கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ராஜஸ்தான் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் அதிக தொகைக்கு ஏலம் சென்ற வீரர் என்ற புதிய சாதனயை படைத்துள்ளார்.

நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கு: சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது!

இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை: அரசியல் சூழ்ச்சியை கண்டுபிடிக்க வேண்டும்- பா.ரஞ்சித்

“ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சியை கண்டறிய வேண்டும்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அதிரடி.. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி.. எஸ்.பி.வேலுமணி

“தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி” என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அலுமினியம் மற்றும் தாமிர தொலைநோக்கு ஆவணங்கள் வெளியீடு!

இந்தியா 2047-க்குள் அலுமினிய உற்பத்தியை ஆறு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொலைநோக்கு ஆவணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதேபோல், தாமிரத்தின் தேவையும் 2047-க்குள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் வகையில், 2030-க்குள் 5 மில்லியன் டன் தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அரசுடன் பிரததமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.