K U M U D A M   N E W S

மூன்றாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. உபரிநீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை: குழந்தை கடத்தல் கும்பலுக்குச் செக்!

பஞ்சாப் மாநிலத்தின் தெருக்களில் யாசகம் பெறும் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உள்ள பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாசகம் செய்வோர் உண்மையிலேயே குழந்தையின் ரத்த உறவா என அறியவே சோதனையெனத் தகவல் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் - நயினார் நாகேந்திரன்

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றும், அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறார்களோ அதன் படி கேட்போம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராக்ளைடிங் விபத்து: 'Fearless Felix' ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் மறைவு!

இத்தாலியில் சாகசம் செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து நீச்சல்குளம் அருகே விழுந்து, ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாராக்ளைடிங் வீரர் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மௌனத்தைக் கலைக்க வேண்டும்.. காங்கிரஸ் கடும் கேள்வி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24வது முறையாக ட்ரம்ப் கூறியதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி நிச்சயமாகப் பதில் அளிக்க வேண்டும் என்ரும், இது தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி மோசடி.. வங்கி இஎம்ஐ மூலம் போலீஸிடம் சிக்கிய மோசடி மன்னன்!

அரசு தொடர்பான வேலைகளையும், சொத்தையும் மீட்டுத் தருவதாகக் கூறி 62.8 லட்சம் மோசடி செய்த மோசடி மன்னன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேர்மைக்கு கிடைத்த பரிசு.. சஸ்பெண்ட் குறித்து DSP சுந்தரேசன் கருத்து!

கார் மறுக்கப்பட்டதாக புகார் அளித்த மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்ட நிலையில், நேர்மைக்கு கிடைத்த பரிசு என சஸ்பெண்ட் குறித்து DSP சுந்தரேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் திருமணப் பதிவுக்கு ஏற்பாடு.. தமிழக அரசு நடவடிக்கை!

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய, தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ம் தேதி சனி அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

மோடி இல்லாவிட்டால் 150 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது -நிஷிகாந்த் தூபே

மோடி இல்லாவிட்டால் 150 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே தெரிவித்துள்ளார்.

'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்… அக்ஷய் குமார் எடுத்த அதிரடி முடிவு!

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது திரைப்படங்களில் செய்யும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுக்காகப் பிரபலமானவர் தற்போது அவர் எடுத்துள்ள மனிதாபிமான முடிவு திரைப்படத் துறையில் பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது