K U M U D A M   N E W S
Advertisement

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: கடலோர ஊடுருவ முயன்ற ஒத்திகை வீரர்கள் உட்பட 13 கைது!

சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை காவல்துறை கண்காணிப்பில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஊடுருவ முயன்ற மேலும் 11 ஒத்திகை வீரர்கள் உட்பட 13 நபர்கள் 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகளுடன் பிடிப்பட்டனர்.

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் – NHAI மறுப்பு விளக்கம்

தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையமான (NHAI) இன்று விளக்கம் அளித்துள்ளது.

அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திடுக.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மாணவிகளை அலைக்கழிப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி

"மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்" என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

TN District News Today: மாவட்ட செய்திகள் | 25 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 25 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு.. நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

கிருஷ்ணாவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படைகள் அமைத்து தேடிவந்த காவல்துறையினர் சைபர் கிரைம் நிபுணர்களுடன் அவரது இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN District News Today: மாவட்ட செய்திகள் | 25 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

TN District News Today: மாவட்ட செய்திகள் | 25 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil

நிதி வேண்டாம்… சாமி வேண்டும்.! வழிக்கு வந்த அண்ணாமலை..? குஷியில் அதிமுக மாஜிக்கள்..!

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தாலும், என் வழி தனி வழி என பயணித்துக் கொண்டிருந்த அண்ணாமலை தற்போது எடப்பாடி பழனிசாமியின் வழிக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை ஆற்றிய உரை பாஜக-வினரை மட்டுமல்லாது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களையும் குஷிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

காசாவில் பயங்கர தாக்குதல்: ஒரே நாளில் 79 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் நடத்திய கடும் விமான தாக்குதலில் வெறும் ஒரு நாளிலேயே 79 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 56,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நெல்லுக்கு உரிய விலை வழங்கவில்லை.. விவசாயிகள் சாலை மறியல்.. அதிகாரிகள் பேச்சுவார்த்தை

வேலூர் அருகே டோல்கேட் பகுதியில் நெல்லுக்கு உரியவிலை கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால், விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.