K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Sumalekha M

மீண்டும் 'லேஆஃப்'... 2.5% ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்!

ஏஐ உள்கட்டமைப்புக்கான முதலீடு மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மைக்ரோசாப்ட் தனது மொத்த ஊழியர்களில் 2.5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள்!' - தனிச்சட்டம் கொண்டுவர முதல்வர் விஜய்க்கு ஆளூர் ஷா நவாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 8 ஆணவக்கொலைகள் நடைபெற்றுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள ஆளூர் ஷா நவாஸ், நீதிபதி கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று ஆணவக்கொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தியுள்ளார்.

தவெக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட்கள் 'நோ'... அரசியலில் புதிய திருப்பம்!

தவெக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி தொடர்பாக உடனடி முடிவு எடுக்க மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

ஊழல் செய்தவர்களை தேடித் தேடி தவெகவில் சேர்க்கிறார்கள்!' - தவெக மீது இயக்குநர் அமீர் விமர்சனம் !

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் நிலையில், அந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர்.

'40 நாட்களாக தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம்!' - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

40 நாட்களாக தவெக எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொண்டு ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் உற்சாகம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் சூழலில், "துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருக்கிறார்கள்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சலை புரட்டிப்போட்ட கனமழை... 3,000 பேர் தவிப்பு!

அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசாமிலும் வெள்ள பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

அரசு வேலை மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் !

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியனை ஜூலை 6 வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

2030-க்குள் 4 புதிய மின்சார கார்கள்... டாடா மோட்டார்ஸின் மெகா திட்டம் !

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், 2030-31க்குள் 4 புதிய EV கார்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

3 சிறுமிகள் பாலியல் வழக்கு... தூக்கு தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்டு!

நெல்லையில் 3 சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உறுதி செய்துள்ளது. பா