மக்கள் தங்கள் புகார்களை 1915 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாகவும், தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் (National Consumer Helpline Portal) மூலமாகவும் பதிவு செய்யலாம். இந்த வசதி தமிழ் உட்பட 17 பிராந்திய மொழிகளில் கிடைக்கும்.
சமீபத்தில், மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைத்தது. இந்த வரிக்குறைப்பின் பலன்களை மக்களுக்குச் சென்று சேர்ப்பது அவசியம் என்பதால், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எந்தவொரு நிறுவனமோ அல்லது வணிகரோ, வரிக்குறைப்புக்குப் பிறகும் பழைய விலையிலேயே பொருட்களை விற்பனை செய்தால், நுகர்வோர் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இந்தப் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









