நீண்ட நாட்களாகக் காத்திருந்த இந்தத் திட்டம், சென்னை மக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஒவ்வொரு போக்குவரத்துக்கும் தனித்தனி பயணச்சீட்டு எடுக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இனி 'CHENNAI ONE' செயலி மூலம் ஒரு பயணச்சீட்டிலேயே அனைத்துப் போக்குவரத்துகளையும் பயன்படுத்தலாம். இது பயணிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, பணப் பரிவர்த்தனையையும் எளிதாக்கும்.
இந்தச் செயலி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகவும், ஸ்மார்ட் சிட்டி நடவடிக்கையின் முக்கிய அங்கமாகவும் பார்க்கப்படுகிறது. இது போக்குவரத்து அமைப்பை மிகவும் திறமையானதாகவும், நவீனமயமானதாகவும் மாற்ற உதவும்.
LIVE 24 X 7









