K U M U D A M   N E W S

குடியிருப்புக்குள் புகுந்த ஏரி உபரிநீர்... கடும் அவதிக்குள்ளாகும் மக்கள்| Kumudam News 24x7

சென்னையில் உள்ள சில முக்கியமான பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

12 PM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

12 PM Speed News | விரைவுச் செய்திகள் | 18-10-2024 | Tamil News | Today News | Kumudam News24x7

தனியார் பள்ளி பேருந்துகள் விபத்து... சிறைபிடித்த பெற்றோர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்துகள் முந்தி செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 மாணவிகள் காயமடைந்த நிலையில் பேருந்தை சிறை பிடித்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.... எச்சரித்த வானிலை ஆய்வு மையம்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 18) 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நொடியில் நடந்த சம்பவம்... துடிதுடித்து பலியான பெண்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராதா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழையால் ஒழுகும் ஊராட்சி மன்ற அலுவலகம்... வெளியான வீடியோவால் அதிர்ச்சி

வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி அலுவலக கட்டடத்தில் மழைநீர் ஒழுகி தேங்கியதில் கணினி, பேட்டரிகள், சான்றிதழ்கள் சேதமடைந்தன. உடனடியாக அலுவலகத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

“நமக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்க... தளபதி தான் நம்ம உயிர்..” சபதம் எடுத்த புஸ்ஸி ஆனந்த்!

தவெக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் தவெக நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியது வைரலாகி வருகிறது.

மதுரையில் பயன்பாட்டுக்கு வந்த தாழ்தள பேருந்து.. எந்தெந்த ரூட்டுகளில் இயக்கப்படும்.. வெளியான தகவல்

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தாழ்தள பேருந்து சேவையை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

”எங்க சார் தப்பு பண்ணல” போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் பூனைக்குட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வாயிலை பூட்டி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதார் கார்டு புதுப்பிப்பு.. கால அவகாசம் நீட்டிப்பு!

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.