K U M U D A M   N E W S

கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு சென்ற போது நேர்ந்த சோகம்...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கடற்கரையில் குடும்பத்துடன் குளித்த 5 பெண்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.

collapsed-overhead-reservoir-tank

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வெட்டுக்காடு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தது. இந்நிலையில், புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்..' சர்ச்சையான விவகாரம்... காவல் ஆணையர் விளக்கம்

ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் விளக்க மனு தாக்கல் செய்தார். 

TNUSRB தலைவராக சுனில்குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு.. பாஜக எம்பிக்கு சம்மன்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுவை பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

'ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றினேன்’.. பொன்னை பாலு வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியான நிலையில், ஆம்ஸ்ட்ராங்க்கிற்கு பயந்து ரோடு ரோடாக சுற்றியதாக பொன்னை பாலு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து... R.S. பாரதிக்கு எதிரான மனு தள்ளுபடி... உயர்நீதிமன்றம் அதிரடி!

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

"குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்.." ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வயநாடு தேர்தலில் போட்டியா..? குஷ்பூ விளக்கம்

வயநாடு மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதற்கு குஷ்பூ மறுப்பு தெரிவித்துள்ளார்.

DD தொலைக்காட்சி அலுவலகம் முன்பு திமுக போராட்டம்

சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவோடு இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.