K U M U D A M   N E W S

காரில் சென்ற பெண்களை விரட்டி சென்று மிரட்டல் - வழக்குப்பதிவு

சென்னை ECRல் காரில் சென்ற பெண்களை துரத்தி சென்று மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு

திருச்சி ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அன்பு என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை.. சட்டம் அமலுக்கு வந்தது

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் கடந்த 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

அரசு நிகழ்ச்சியில் சீருடையில் வந்து அசத்திய அமைச்சர் 

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்.

பெண்ணை பின் தொடர்ந்தால்.... புதிய சட்டம் அமல்

2வது அல்லது தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

மினி பேருந்து டிக்கெட் கட்டணத்தில் மாற்றம்

புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தின் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவு.

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்தும் திமுக.. அண்ணாமலை ஆதங்கம்

நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வேங்கைவயல் ஆடியோ வீடியோ உண்மையா? அரசு சொன்ன விளக்கம் 

"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 செல்போன்களும் பறிமுதல் செய்து, ஆய்வு செய்யப்பட்டது"

கடல் ஆமைகள் உயிரிழப்பு.. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..?  பசுமை தீர்ப்பாயம் கேள்வி

ஆமைகள் உயிரிழப்பிற்குக் காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தியதாக எத்தனை மீன்பிடி கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.