Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 24-09-2024
Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 24-09-2024
Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 24-09-2024
‘’கண்ணப்பர் திடலில் வசிக்கும் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 40 வருடங்களாக வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கவில்லை’’ என்று ஒருபகுதி மக்கள் குற்றம்சாட்டினார்கள்.
''கலைஞர் மீதும் என் மீதும் அன்பு கொண்டவர் தோழர் சீதாராம் யெச்சூரி. சமூக நீதிக்காகவும், பெண்களின் சம உரிமைக்காவும் போராடினார். அவர் எப்போதும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்து வந்தார்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
Selvaperunthagai Press Meet: பகுஜன் சமாஜ் மாநிலச் செயலாளர் ஜெய்சங்கரின் நடவடிக்கையால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் கடத்தி வந்து தேனியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மாணவியை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டு சென்ற நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
மீனவர் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் பெயரளவுக்கு மட்டுமே கடிதம் எழுதுகிறார். மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை திமுக அரசால் நிர்பந்தித்து பெற முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை காம்தார் நகருக்கு, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது மகன் சரண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sri Lanka vs New Zealand Test Match : 35 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை தனது 2வது இன்னிங்சை விளையாடியது. திமுத் கருணாரத்னே (83 ரன்), தினேஷ் சண்டிமால் (61 ரன்), ஏஞ்சலோ மேத்யூஸ் (50 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் அந்த அணி 309 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி ஊராட்சியை பேரூட்சியாக மாற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.