K U M U D A M   N E W S

BREAKING | மாபெரும் மனித சங்கிலி போராட்டம்... அதிமுக அறிவிப்பு!

மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தவெக மாநாட்டின் பூமி பூஜை..எந்த தேதியில் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது

அக்டோபர் 2ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றுங்கள் - அன்புமணி ராமதாஸ்!

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 2ஆம் தேதி தருமபுரி மாவட்ட கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்! என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டு குறித்து சர்ச்சை வீடியோ.. ‘பரிதாபங்கள்’ சேனலுக்கு ஆதரவு அறிக்கை

திருப்பதி லட்டு குறித்து வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் சேனலுக்கு ஆதரவாக, தமிழ்நாடு டிஜிட்டல் படைப்பாளிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தேசபக்தியை அழிக்கும் காங்கிரஸ்... நேர்மையற்ற கட்சி.. பிரதமர் மோடி சாடல்!

நாட்டிலேயே மிகவும் நேர்மையற்ற கட்சி காங்கிரஸ்தான் என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.

பிரேக் பிடிக்காததால் நடந்த அசம்பாவிதம்... அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கோர விபத்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் இரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்

ஆட்டம் காட்டும் தங்கம் விலை.. மீண்டும் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.7,100க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ400 உயர்ந்து ரூ.56,800க்கு விற்பனையாகிறது.

பாலியல் சீண்டல்.. மன்னிப்பு கேட்ட பாஜக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

32,500 பேருக்கு ஊதியம் கொடுக்கல.... மாநில அரசு என்ன பண்ணுது? - ராமதாஸ் கேள்வி

மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் கல்வித்துறை பணியாளர்கள் 32,500 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, மாற்று ஏற்பாடு செய்யும் கடமை மாநில அரசுக்கு இல்லையா? என பாமக நிறுவனம் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாம்சங் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 926 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.