தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
10% வாக்குகளை அதிமுக இழந்துள்ளது. இழந்த வாக்குகளை மீட்கும் வகையில் செயல்பட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது.
கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை பெற எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று ஆலோசனை.
கனமழை எதிரொலியாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத் தேவைக்காக நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பரபரப்பாக தொடங்கிய இறுதிகட்ட வாக்குபதிவு
துணை முதலமைச்சர் உதயநிதி.. “இனி தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்..” - இபிஎஸ் கிண்டல்
ஏதாவது பட்டமோ, பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும். அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன் என துணை முதலமைச்சரான உதயநிதி தெரிவித்துள்ளார்