#BREAKING: ரஜினிகாந்தின் இல்லத்தை சூழ்ந்த மழைநீர்! | Kumudam News 24x7
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டை சூழ்ந்த வெள்ளநீர்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டை சூழ்ந்த வெள்ளநீர்.
சென்னை ராமாபுரத்தில் வெள்ளநீர் புகுந்த வீட்டுற்குள் சிக்கித் தவித்த 85 வயது மூதாட்டி மீட்பு.
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே பாதிப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மரங்களை குரோம்பேட்டை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் ரயில் போக்குவரத்து சீரானது.
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரமே வீடு திரும்புவது நல்லது என, தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் செய்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன் ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் வழக்கத்தை விட 84 சதவிகித மழைப்பொழிவு அதிகம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
#JUSTIN: வடகிழக்கு பருவமழை; கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Kumudam News 24x7
Today Headlines : 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 15-10-2024 | Kumudam News24x7
சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் சென்ற வாகங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
சென்னை சாலைகளில் மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகுந்த அவதி அடைந்து வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதனால் கனமழை முடியும் வரை இணைய வழி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் இயல்பை விட 81% அதிகம் மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழை காரணமாக 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கனமழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அருகே மூலச்சேரியில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த 4 மாடுகள் உயிரிழந்தன. மாட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் எங்கேயும் மின் தடை இல்லை என்றும் 13,000 தன்னார்வலர்கள் சுகாதார பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் பெரம்பூர் நெடுஞ்சாலை ஜீவா ரயில் நிலையம் அருகே கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதை உடனடியாக சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 930 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக வட சென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னையின் புரசைவாக்கம், கிண்டி, அசோக் பில்லர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.