இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அவை ஒத்திவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் அமர்வு தொடங்கியது.
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் திமுகவினரின் போஸ்டரால் பரபரப்பு.
சென்னையில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக-பாஜகவை விமர்சிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஆட்சி மீதான மக்களின் கோபத்தை திசைதிருப்ப ஆளுநர் மீது பழிசுமத்துவது வாடிக்கையாகிவிட்டது- அண்ணாமலை
தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரை காப்பாற்றும் அதிமுகவையும் கண்டித்து போராட்டம் - திமுக அறிவிப்பு
தமிழக சட்டமன்ற மரபை காக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் பின்பற்றியே ஆக வேண்டும் - தவெக தலைவர் விஜய்
உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றது சிறுபிள்ளைத்தனமானது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
கூட்டத்தொடரில் அதிமுக கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசித்ததாக தகவல்.