K U M U D A M   N E W S

குரங்கம்மை.. ICU-வை தயார் நிலையில் வையுங்கள்.. சுகாதாரத்துறை எச்சரிக்கை

மருத்துவமனைகளில் ICU-வை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்; வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என குரங்கமை எதிரொலியால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

#BREAKING கிண்டி ரேஸ் கோர்ஸ்க்கு சீல்... நிர்வாகம் தரப்பில் மேல்முறையீடு

780 கோடி ரூபாய் வரி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது

JayamRavi: “என்னை சார்ந்தவர்களின் நலனுக்காக..” மனைவியை பிரிய ஜெயம் ரவி சொன்ன காரணம்.. உண்மை இதுதானா?

Actor Jayam Ravi Divorce Announcement of Wife Aarthi : நடிகர் வரும் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சில தினங்களாகவே இதுகுறித்து செய்திகள் வெளியாகிவந்த நிலையில், திடீரென மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1,556 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்.. சென்னையில் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்து 556 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியில் துணை கேப்டன் நியமிக்கப்படாதது ஏன்?.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால் அவரே அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் இப்போது அவரும் துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை.

Jayam Ravi : “திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்..” மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் ஜெயம் ரவி!

Actor Jayam Ravi Divorce Announcement of Wife Aarthi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

#JUSTIN : வேலூரில் ரயில் சேவை பாதிப்பு.. அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வேலூர் ரயில்வே கேட் அருகே மின் வயர் அறுந்ததால் திருச்சியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் நிறுத்தப்பட்டது. மின் வயர் சரி செய்யும் பணிக்காக சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நின்றதால் ரயில்வே அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

GOAT: விஜய்யின் கோட் படம் பார்த்தாரா அஜித்..? வெங்கட் பிரபுவுக்கு போன சூப்பர் மெசேஜ்!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அஜித்திடம் இருந்து குட் நியூஸ் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

#breaking: மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

திருப்பூரில் பயங்கரம்... மாமனாரை சுட்டுக்கொன்று உயிரை மாய்த்துக் கொண்ட மருமகன்

திருப்பூர் காங்கேயம் அருகே குடும்ப தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு மருமகன் ராஜ்குமாரும் தன்னை தானே மாய்த்துக்கொண்டார்.