Diwali 2024: நெருங்கும் தீபாவளி.. சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தீபாவளிக்கு புத்தாடை எடுக்கவும் பொருட்கள் வாங்கவும் குவிந்த மக்களால், நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை உணவுப் பொருட்கள்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கடைகளில் துணிகள், நகைகள், இனிப்புகள், பட்டாசுகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் தீபாவளிக்கு (அக். 31) மறுநாள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
சென்னை வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து காவல்துறை அனுமதி.
ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
“தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயாராக இருக்க சொல்லியுள்ளோம், விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகளை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க உள்ளோம்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.