12 மாவட்டங்களில் டேஞ்சர்..! - ருத்ரதாண்டவம் ஆடப்போகும் கனமழை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை ஆரம்பித்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆளுநரும் திமுகவும் ஒன்றாகி விட்டனர். தமிழக ஆளுநருடன் அனுசரித்து போகின்றோம் என பிரதமருடன் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மழைநீரை அகற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை மாதவரம் வடதிருப்பாக்கம், வடகரை ஆகிய முக்கிய சாலைகளில் வெள்ளம் போல் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் பெய்து வந்த கனமழை ஓய்ந்தும் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதால் அரசு உடனடியாக இதை சீர் செய்து தர வேண்டும் என கோரிகை விடுத்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவின் போது ட்ரோன் மூலம் உணவு, மருந்து வழங்கியது போல, சென்னையிலும் வழங்க மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள நிலையில், ட்ரோன் பறக்க விட்டு பைலட்கள் ஒத்திகை பார்த்தனர்.
தமிழ்நாட்டில் இன்று (அக். 16) சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
மழைக்கால தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் செயலை விட விளம்பரம் தான் அதிகமாக உள்ளது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு பால் விநியோகம் தடையின்றி கிடைக்க, ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால் அருகே உள்ள கண்மாய்களும் நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதிகளில் NDRF வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
சென்னை துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் 2 நாட்களாக வடியாத மழைநீர்.
சென்னையில் நேற்று 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எந்த பாதிப்பும் இன்றி கூடுதல் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 பகுதிகளில் அகற்றப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள 103 இடங்களில் மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
சென்னையில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், அதன் மீட்புப் பணிகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் ஸ்டாலினிடம் முக்கியமான கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக, அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் தூய்மைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைநீருடன் அடித்து வரப்பட்ட குப்பைகள், மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று பெய்த கனமழை இன்று இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். தற்போதைய மழை நிலவரப்படி சென்னை மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றே சொல்லப்படுகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
சென்னை பாரிமுனையில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்தது. பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீரானது.
பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 360 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது