K U M U D A M   N E W S
Kumudam Ad

தனக்கு தொடர்பு இல்லை; அமலாக்கத்துறை கைதை ரத்துசெய்ய வேண்டும் - ஜாபர் சாதிக் மனு ஒத்திவைப்பு

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமலாக்க துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய  ஜாபர் சாதிக் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அமலாக்கதுறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

கூலி கெட்டப்பில் ரஜினி... ”தலைவரே இது பேட்ட லுக் மாதிரி இருக்குதே..” ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ரஜினியின் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு - சிபிஐ முக்கிய உத்தரவு

குட்கா முறைகேடு வழக்கை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சிபிஐ நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் சம்பவம்: ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

வேங்கைவயல் சம்பவத்தில் சந்தேகத்துக்குரியவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் குரல் மாதிரி சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடிச்சவங்களுக்கே 10 லட்சம்... இவர் குடும்பத்துக்கு 25 லட்சம் கொடுங்க -கோபி நயினார்

''ராஜ்குமார் உயிரிழப்புக்கு காரணமான வட்டாட்சியர் பிரீத்தியை கைது செய்தனர். பிரீத்தியை இடமாற்றம் செய்தததால் தமிழ்நாடு அரசு அவரை பாதுகாக்கிறது என்பதுதான் அர்த்தம்''

மிரட்டல் லுக்கில் அஜித்... திடீரென வெளியான விடாமுயற்சி செகண்ட் லுக்... என்ன காரணம் தெரியுமா?

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சர்ப்ரைஸ்ஸாக செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

நாடு முழுவதும் எதிர்ப்பு அலை... 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படுமா?... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேரள சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது... தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தும் பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வெளுத்து வாங்கப் போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மீது நம்பிக்கை இல்லை - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பிரேமலதா விளக்கம்

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.