9 ஆண்டுகளாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்: போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரம்!
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாததால் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாததால் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎல் வீரர் மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ-யின் புதிய தலைவராகப் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகவுள்ளது.
2023-ம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. இது, வருவாய் குறைவில் தமிழகத்தை மூன்றாவது இடத்தில் வைத்துள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
"அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது நடிகர் சங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நடிகர் வடிவேலு வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தொப்புள் கொடியுடன் 7 மாத ஆண் சிசு ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது. மகாலய அமாவாசை தினத்தன்று நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே நரபலி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க, மத்திய அரசின் ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
Headlines Now | 5 PM Headlines | 21 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | PMK | BJP
வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.