K U M U D A M   N E W S
Kumudam Ad

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமினை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் பலி.. சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தினேஷ் குமார் மரணம் தொடர்பான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிச் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மாலில் சுவர் ஏறி குதித்த வடமாநில கும்பல் சிக்கியது எப்படி? | Chennai Egmore Mall | Kumudam News

மாலில் சுவர் ஏறி குதித்த வடமாநில கும்பல் சிக்கியது எப்படி? | Chennai Egmore Mall | Kumudam News

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அவலம்: எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் முடிவுகள் எழுத்துவடிவில் தாமதம் - பெற்றோர் கடும் அவதி!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் நோயாளிகளுக்கு முடிவுகள் வெறும் எழுத்து வடிவிலும், தாமதமாகவும் வழங்கப்படுகின்றன.

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.

பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் பல லட்சம் மோசடி.. பட்டதாரி இளைஞர் கைது!

பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போலிப் பக்கம் தொடங்கி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

புதிதாக விடப்பட்ட ஆண் சிங்கம் கூண்டுக்குள் திரும்பாததால் தேடல்; அதிகாரிகள் உறுதிப்படுத்திய தகவல்!

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், லயன் சபாரிக்காக விடப்பட்ட புதிய ஆண் சிங்கம் ஒன்று 2 நாட்களாக மாயமானது. பூங்கா ஊழியர்களின் தேடுதலுக்குப் பின், அந்தச் சிங்கம் லயன் சபாரி பகுதிக்கு உள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் லயன் சபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மாசுபட்ட இருமல் மருந்து மரணங்கள்: 6 மாநில உற்பத்தி அலகுகளில் CDSCO ஆய்வு; தமிழகத்தில் விற்பனைக்குத் தடை!

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டை வஞ்சிப்பது பாஜகவின் வாடிக்கை": ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதிப் பகிர்வு மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் குற்றம் சாட்டினார்.

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.