K U M U D A M   N E W S
Kumudam Ad

கடலூர் ரயில் விபத்து எதிரொலி - அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி!

நாடு முழுவதும் அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி அமைக்க வேண்டும் இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்கில், தினசரி இருமுறை சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

ஏங்ங்க.. பிக்பாஸ் வீட்டில் களமிறக்கும் AI போட்டியாளர்?

பிக்பாஸ் சீசன் 19-ல் AI ரோபோ ஒன்று போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது - சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம்.. 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு.. பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6:15 முதல் 6:50 வரை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் – நடிகர் அஜித் குமார்

பிரபல ஹாலிவுட் திரைப்படமான FAST & FURIOUS தொடர் போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் அதில் நடிப்பேன் என்று நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் Melon: ரூ.1 கோடி மதிப்பிலான எல்எஸ்டி, கெட்டமைன், கிரிப்டோகரன்சி பறிமுதல்!

டார்க்நெட் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட “கெட்டாமெல்லன்” என்று அழைக்கப்படும் கும்பலைச் சேர்ந்த கொச்சின் சேர்ந்த எடிசன் பாபு என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. ஆப்ரேஷன் MELON என்ற சோதனை நடவடிக்கையில் 1 கோடிக்கும் அதிக மதிப்புள்ள எல்எஸ்டி, கெட்டமைன் மற்றும் கிரிப்டோகரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி – 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூலை 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 8 நாள் சுற்றுப்பயணமாக வரை 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் இருநாட்டுகளின் உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் உலகளாவிய நிலைப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது.

ட்ரம்பின் முடிவால் USAID நிதி நிறுத்தம்: 1.4 கோடி மக்கள் உயிரிழக்கும் அபாயம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

USAID அமைப்பால் வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியை ட்ரம்ப் அரசு நிறுத்தியதால், உலகளவில் சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான விளிம்புநிலை மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.