K U M U D A M   N E W S

யானை வேட்டையாடியதாக விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்- அவசர வழக்காக இன்று விசாரணை!

தருமபுரியில் யானை வேட்டையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மர்ம மரணம் தொடர்பாக மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி முறையீடு அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தொடர் சரிவில் தங்கம் விலை...இன்றைய விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

மலையாள திரையுலகில் முதன்முறையாக..புதிய வரலாறு படைத்த 'எம்புரான்' திரைப்படம்!

பிருத்திவிராஜ் - மோகன்லால் கூட்டணியில் வெளிவந்த எல்-2: எம்புரான் திரைப்படம் மலையாள திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

திருச்சி, கோவை என அடுத்தடுத்து தொடரும் ED RAID.. கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டிலும் சோதனை!

திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என். நேரு மற்றும் கோவையில் மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அவரது சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான நிறுனங்களில் ED சோதனை!

சென்னையில் அமைச்சர் கே.என். நேரு மகன் அருண் மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிசந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பங்குனி திருவிழா.. இந்து பக்தர்களுக்கு குடிதண்ணீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி ஊர்வல வைபத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடி தண்ணீர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.

வடமாநில சிறுமி தற்கொலையில் திடீர் திருப்பம் – காதலேன கழுத்தை நெறித்து கொலை செய்தது அம்பலம்

சிறுமியை காதலனே கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது; தப்பியோடிய நபருக்கு வலை

எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல்!

எம்புரான் திரைப்படத்தை வெளியிட்ட கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். தொடர்ந்து, மலையாள நடிகர் பிருத்விராஜ் எம்புரான் படத்திற்க்கு முன் நடித்த சில படங்களில் பெற்ற வருமானங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

“கூடா நட்பு கேடாய் முடியும்” –விருதுநகரில் பாஜக போஸ்டரால் பரபரப்பு

கூடா நட்பு கேடாய் முடியும்.. வேண்டும் மீண்டும் அண்ணாமலை.. என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக நிர்வாகி ஒட்டியுள்ளதால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு...9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு தரப்பு சாட்சி விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்