K U M U D A M   N E W S

கோவையில் முன்விரோதத்தால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்...4 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

குனியமுத்தூர் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடரும் வேலை நிறுத்தம்.. வாழ்வாதாரத்திற்காக போராடும் விசைத்தறி தொழிலாளர்கள்!

விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 30 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விசைத்தறி தொழிலையே நம்பி உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி வாழ்வாதாரத்திற்காக போரடுகின்றனர்.

அமைச்சர் கே.என். நேரு மற்றும் சகோதரர் வீடுகளில் 2-வது நாளாக தொடரும் ED ரெய்டு..!

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மற்றும் மகன் அருண் நேரு தொடர்புடைய இடங்களில் 2- வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.

சிலிண்டர் விலை உயர்வு: அடுப்பு எரிய வேண்டுமா? மக்களின் வயிறு எரிய வேண்டுமா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் 'நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அருண் விஜய்காக களமிறங்கும் தனுஷ்.. ’ரெட்ட தல’ புதிய அப்டேட்

அருண் விஜய் நடித்துள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

தொடர்ந்து மக்கள் தலையில் விழும் பேரிடி.. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட சில நிமிடங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு புகாரில் ஒன்றுமில்லை...இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதில்

டாஸ்மாக் முறைகேடு என்ற புகாரில் ஒன்றுமில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.

ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் விடுவிக்கக்கூடாது - தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரங்கள் உள்ளதால் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என தமிழக அரசு போக்சோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கவுன்சிலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்பூசணி விவசாயிகளுக்காக சீமந்த விழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

ஜெயங்கொண்டம் அருகே தர்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீமந்த விழாவில் 700 பேருக்கு தர்பூசணி வழங்கி, விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதிகளின் செயலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.