K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழில் இருந்து உருவானது கன்னடம்.. ‘கைமேரா’ இசை வெளியீட்டு விழாவில் பேரரசு பேச்சு..!

"தமிழில் இருந்து பிறந்தது தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்” என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

LGBTQ+ குறித்து கருத்து.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்..!

“உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய கருத்துகள் LGBTQ + தோழர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து... ஒருவர் உயிரிழப்பு.. 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா கோலாகலம்.. பக்தர்கள் பங்கேற்பு!

பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவதை முன்னிட்டு, ஜூலை 4 முதல் 6 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு – அப்பேட் கொடுத்த அமைச்சர்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி

இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது.. ஜூலை 3 வரை இலங்கை நீதிமன்ற காவல்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, ஜூலை 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘குபேரா’ படத்தின் வசூல் நிலவரம்.. எவ்வளவு தெரியுமா?

தனுஷ் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி வெளியனான ‘குபேரா’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பழவேற்காடு அருகே 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை.. துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது!

பழவேற்காடு அருகே நடைபெற்ற ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது, கடல் வழியாக அதானி துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 9 பேரும், சாலை வழியாக முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காசாவில் பயங்கர தாக்குதல்: ஒரே நாளில் 79 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேல் நடத்திய கடும் விமான தாக்குதலில் வெறும் ஒரு நாளிலேயே 79 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 56,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.