K U M U D A M   N E W S

'இந்திய அரசியலின் ஆளுமை'.. கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

''தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் கருணாநிதி எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ்நாட்டு மக்களால் பலமுறை தேந்தெடுக்கப்பட்ட கருணாநிதி ஒரு அரசியல் தலைவராக, முதலமைச்சராக இந்திய வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொழில்நுட்ப தேர்வுகளுக்கான பணியிடங்களை குறைத்த டிஎன்பிஎஸ்சி.. தேர்வர்கள் ஷாக்!

தமிழ்நாடு அரசு வேலையில் சேர வேண்டும் என லட்சக்கணக்கானவர்கள் மனதில் நிறைய கனவுகளுடன், விடா முயற்சியுடன் படித்து வருகின்றனர். ஆனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வு முடிகளை காலதாமதமாக வெளியிட்டு வருவதாக தேர்வர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

'நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி'.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலை கைது அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரன் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

வறுமையால் குழந்தையை விற்ற பெற்றோர்.. வியாபாரம் நடந்தது அம்பலம்..

வியாசர்பாடியில் குழந்தை விற்கப்பட்ட விவகாரத்தில், மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தையை வைத்து வியாபாரம் நடந்தது அம்பலமாகி உள்ளது.

'நீட்' ரத்து ரகசியத்தை எப்போது சொல்வீங்க உதயநிதி?.. கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி!

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.

Ravindra Jedeja: 'இதைச் செய்யுங்கள்'.. ரவீந்திர ஜடேஜாவிடம் கண்டிப்புடன் சொன்ன ஜெய்ஷா.. என்ன நடந்தது?

Ravindra Jedeja Play in Duleep Trophy 2024 : ''இந்திய அணியில் எந்த வீரர் காயம் அடைந்தாலும், உள்ளூர் போட்டிகளில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்த பிறகுதான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடிவும். இந்த விஷயத்தில் நாங்கள் கண்டிப்புடன் உள்ளோம்'' என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.

Atal Setu Bridge Viral Video : பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்... துணிச்சலாக காப்பாற்றிய கார் டிரைவர்... வைரலாகும் வீடியோ!

Atal Setu Bridge Viral Video : மும்பையில் அடல் சேது பாலத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

'டோன்ட் வொரி'.. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு.. பிரதமர் மோடியிடம் உறுதியளித்த முகமது யூனுஸ்!

தலைநகர் டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். ''வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்களும் கவலைப்படுகின்றனர்'' என்று மோடி கூறியிருந்தார்.

Palaruvi Express Train : 'முத்து நகர்' மக்களின் கனவு நனவானது.. 'பாலருவி' எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு!

Palaruvi Express Train Extended To Tuticorin : நெல்லை - தூத்துக்குடி வழித்தடத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்துக்கு சென்றால் எஞ்சின் மாற்ற வேண்டும். இதனால் கூடுதல் நேரம் விரயமாகும் என்பதால் 'பாலருவி' எக்ஸ்பிரஸ் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் செல்லாமல் பைபாஸ் வழியாக இயக்கப்படுகிறது.