K U M U D A M   N E W S

சென்னை

இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகில் இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது.  இந்தியா முழுவதும் விவேகானந்தரின் அருளும் ஆசீர்வாதமும் நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா..? புறக்கணிப்பா..? பாஜக ஆலோசனை

சென்னையில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கேக்கில் நெளிந்த புழுக்கள்.. கர்ப்பிணி மனைவி சாப்பிட்டதாக வாடிக்கையாளர் குமுறல்

போரூரில் பிரபல தனியார் பேக்கரி கடையில் இருந்து வாடிக்கையாளர் வாங்கி சென்ற கேக்கில் புழுக்கள்  இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து அதிமுக அன்னியப்பட்டு போகாது- கெளதமி

அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து நாங்கள் அன்னியப்பட்டு போக மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 

"தமிழ் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி" - முதலமைச்சர் பேச்சு

அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

இப்போது எந்த நடுக்கமும் இல்லை.. மைக் சரியாகதான் பிடித்திருக்கிறேன்.. நடிகர் விஷால்

’மத கஜ ராஜா’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க நடிகர் விஷால், இப்போது எந்த நடுக்கமும் இல்லை என்றும் சாகும் வரை ரசிகர்களின் அன்பை மறக்கமாட்டேன் என்றும் பேசியுள்ளார்.

காவல், ஐ.டி அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி

ஜெய்லர், துணை ஜெய்லரை தாக்கிய கைதி.. புழல் சிறையில் பரபரப்பு

சென்னை அடுத்த புழல் சிறையில் ஜெய்லர் மற்றும் துணை ஜெய்லரை தீவிரவாதி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

கும்பகோணம் கோவில் குளங்களில், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஒத்துழைக்காத கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படைத் தலைவன் திரைப்படம்.. ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியாகாது... தயாரிப்பு நிறுவனம் உறுதி..!

மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்னதாக வெளியிடப்பட மாட்டாது என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவிக்கப்பட்டது.