K U M U D A M   N E W S

சென்னை

திரைப்பட தயாரிப்பாளர் சங்க வழக்கு.. ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க உத்தரவு

படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில், ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Find my device ஆப் மூலம் காணாமல் போன செல்ஃபோனை கண்டுபிடித்த பெண்!

நெற்றியில் தாக்கிவிட்டு, வைத்து தாக்கி செல்போனை பறித்து சென்ற கும்பலை, find my device ஆப் மூலம் சில நிமிடங்களில் செல்போன் பறித்துசென்ற திருடர்களை துரத்தி பிடித்த செல்போன் பறிகொடுத்தவரின் மனைவி மீட்டுள்ளார்

த.வெ.க வழக்கு.. ஜூன் மாதம் தள்ளிவைத்த நீதிமன்றம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை ஒழுங்குப்படுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

களமிறங்கும் "ரோபோட்டிக் காப்" –சென்னை போலீஸ் அறிவிப்பு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதி அறிமுக செய்ய உள்ளதாக சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்...பூந்தமல்லி – போரூர் இடையே சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர்கள் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளிவைப்பு!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணாகிறது - நீதிபதி வேதனை

பொதுமக்களின் வழக்குகளுக்காக 7 சதவீத நேரத்தை மட்டுமே நீதிமன்றங்கள் செலவிடுவதாகக் குறிப்பிட்ட சென்னை நீதிமன்றம், நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு பொன்னான வாய்ப்பளித்த கோல்டன் ஸ்பேரோ கார்னிவல்!

ரோட்டரி மாவட்டம் 3233 சார்பில் நடைப்பெற்ற கோல்டன் ஸ்பேரோ கார்னிவல் நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்று தங்களது திறமையினை வெளிப்படுத்தினர்.