K U M U D A M   N E W S

சென்னை

இன்று நடைபெறும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு... 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்பு

தமிழ்நாட்டில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தக்கோரி விசிக சார்பில் இன்று மாபெரும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

#BREAKING || அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

சிறுமி பாலியல் வழக்கு... சிபிஐக்கு மாற்றம்

சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய விமான படை வீரர்கள் சாகச ஒத்திகை... களைகட்டிய மெரினா பீச்

விமானப்படை சார்பில் சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி விமான சாகசம் நடைபெற உள்ளது. தற்போது மெரினாவில் இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RSS ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது... காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணை

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.  

கோவை ஈஷா யோகா மையத்தில் பரபரப்பு.. போலீசார் அதிரடி ஆய்வு..

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாக காமராஜ் என்பவர் செனனி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் ஈஷாவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் இருந்து குதித்து தப்பியோடிய ‘குருவி’.. கைதானவர்களின் வாக்குமூலம் என்ன?

சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இம்முறை தப்புமா சென்னை! மாநகராட்சி ஆணையர் இன்று ஆலோசனை | Kumudam News 24x7

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று ஆலோசனை.