K U M U D A M   N E W S

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை... ஆசிரியர்களின் புதிய முயற்சி

உதகை அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படும் என ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை!

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதி இல்லை என்ற பொதுநல மனுவின் மீது நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டுள்ளனர்.

'பென்ஸ்' படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்? நாளை வெளியாகும் அப்டேட்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

திருச்சி பண்பலையில் ஹிந்தியா? MP துரை வைகோ எடுத்த நடவடிக்கை

திருச்சி பண்பலை 102.1-இல் பகலில் தமிழும், இரவில் ஹிந்தியுமாக ஒலிபரப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தத்தோடு, முழு நேரமும் தமிழில் ஒலிபரப்பு மேற்கொள்ள திருச்சி மக்களவைத் தொகுதி எம்பி துரை வைகோ வைத்த வேண்டுகோள் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

டபுள் ஹீரோ கதையில் இணையும் ரவி மோகன்- எஸ்.ஜே.சூர்யா.. ரசிகர்கள் உற்சாகம்!

கார்த்திக் யோகி இயக்கும் டபுள் ஹீரோ படத்தில் ரவி மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசு நாடகமாடுகிறது – ஆனந்தன் குற்றச்சாட்டு

ஆம்ஸ்ட்ராங் வழக்கை வைத்து தமிழக அரசு நாடகமாடுவது நம்பகத்தன்மை அற்ற செயலாக இருக்கிறது என பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன் கருத்து

உயிரை காக்க சென்னைக்கு கொண்டுவரப்பட்ட மொரிசியஸ் குழந்தை...நடுவானில் நடந்த சோகம்

குழந்தையை இழந்த மொரிசியஸ் தம்பதி விமானத்துக்குள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஓடிடியில் வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி

நடிகர் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

இந்த வழக்குக்கு எல்லாம் நீதி எப்போ? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

மீண்டும் பள்ளிக்கு போகலாம்… விடுமுறைக்கு பின் மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் மற்றும் சாக்லேட், குங்குமம், சந்தனம் வழங்கி பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.