K U M U D A M   N E W S

RCB வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்!

பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

RCB வெற்றி விழா: 35 ஆயிரம் சீட்டுக்கு 3 லட்சம் பேர்.. கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

துக்க நிகழ்வாக மாறிய RCB வெற்றி கொண்டாட்டம்: 10 பேர் உயிரிழப்பு

நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி முதல் முறையாக கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக, இன்று பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீரர்களை காண குவிந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா..?

நடிகர் சூர்யா 'ஆவேஷம்' பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

அரசு பேருந்தில் ’தமிழ்நாடு’ பெயர் விவகாரம்.. ஆதாரத்தை நீட்டிய அமைச்சர் சிவசங்கர்

’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.

பாஜக MLA டாக்டர் சரஸ்வதியின் மகள் காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு!

மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

விசிகவில் கோஷ்டி பூசல் மாவட்டச் செயலாளர் இடைநீக்கம்..!

கிருஷ்ணகிரி விசிகவில் கோஷ்டி பூசல் பூதாகரமாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தலைவலிக்கு ஆளான தலைமை மாவட்டச் செயலாளரை இடைநீக்கம் வரை செய்துள்ளது.

அமைச்சர்களை ஓரங்கட்டிய மேயரின் கணவர்..! கட்டம் கட்டிய கட்சித் தலைமை..! பக்காவாக காய்நகர்த்தும் மூர்த்தி..!

உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் கையில் எடுத்து ஆடுவதாக பல மாதங்களாக புகார்கள் புகைந்துகொண்டிருந்தன. அதற்கு தீர்வுகாணும் வகையில் முதல்வர் கையில் சாட்டை எடுக்க, மதுரையில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

பாடலாசிரியருக்கு நேர்ந்த விபரீதம்.. தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர்.. போலீசில் புகார்!

தேசிய விருது பெற்ற பாடலாசியர் பா.விஜய்க்கு பாடல் எழுதுவதற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, ஒன்றரை வருடம் கழித்து, அவரை தரக்குறைவாக பேசி பணத்தை திருப்பி கேட்ட பெண் தயாரிப்பாளர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

கொரோனாவினால் தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை - அமைச்சர் சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், இணை நோய் பாதிப்பு இருப்பதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சீர்மிகு சிறுநீரக மருந்து திட்டத்தில் மக்கள் பயன் பெற நகரத்திலும் டயாலிசஸ் செய்யும் வசதியை கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.