K U M U D A M   N E W S

ஜாமினில் வெளிவந்ததும் அமைச்சர் பதவியா..? செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கண்டனம்

ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும் என்று  உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலக்கல்லூரி மாணவர் கொலை வழக்கு... 4 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மானவர்கள் நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அதிர்ச்சி.. சிலிண்டர் விலை திடீர் உயர்வு

19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சம்பல் வழக்கு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

சம்பல் மசூதி மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுகும்வரை, கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

வீட்டு வேலைக்கு காவலர்களை பயன்படுத்தும் அதிகாரிகள்.. விசாரணை நடத்த டிஜிபிக்கு செய்ய உத்தரவு

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமான்..? வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 231 வழக்குகள்.. அதிரவைக்கும் காவல்துறை ரிப்போர்ட்..!

சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுத்தடுத்து எகிறி அடிக்கும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..?

சென்னை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.7,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீதிமன்றத்தை மதிக்காத பிரபல ரவுடி சீர்காழி சத்யா... கடுப்பான நீதிபதிகள் எடுத்த முடிவு!

நீதிமன்ற நிபந்தனையை பூர்த்தி செய்யாததால், ரவுடி சீர்காழி சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்ற சென்னை உயர் நீதிமன்றம், உடனடியாக அவரை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.