K U M U D A M   N E W S

வழக்கு விசாரணையின்போது ஆராய்ந்து முடிவெடுக்கப்படும், பாரபட்சம் இருக்காது - உயர்நீதிமன்றம்

வழக்குகளின் விசாரணையின்போது வழக்கின் தன்மையை மட்டுமே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் இதில் எந்தவிதமான பாரபட்சமும் இருக்காது என  சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம்.. நிலம் கையகப்படுத்தும் ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்,  சாதி அடிப்படையில் கோவிலை நிர்வகிப்பது  மத நடைமுறையும் அல்ல எனவும்  தெரிவித்துள்ளது.

சுற்றுலா வாகனங்கள் கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் - தமிழக அரசு

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்த நீதிபதியே தான் மீண்டும் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கான பிரத்யேகமாக உள்ள நீதிபதியே விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.

தனியார் வங்கி மிரட்டல் - RBI-க்கு உயர்நீதிமன்றம் ஆணை

கொரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியார் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sivaji Ganesan's house seized; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Bad girl திரைப்பட சர்ச்சை... தணிக்கை சான்றிதழ் விண்ணப்பம் வரவில்லை..!

Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என மத்திய அரசின் சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகளை மீறினால் கைது சீமானுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

காவல்துறை சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை நடைபெறவிருந்த போரட்டத்திற்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.