K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

"தீபாவளி மாமூல் எங்கடா.." - ஊழியருக்கு விழுந்த மரண அடி.. பகீர் கிளப்பும் வீடியோ காட்சி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வெள்ளப்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மாமூல் கேட்டு ஊழியரை இளைஞர் சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஸ்தம்பிக்கும் கொடைக்கானலின் அதி முக்கிய சாலை - "நகரவே முடியாத அளவுக்கு டிராபிக் ஜாம்

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் அந்த பகுதியில் நிலவுகிறது.

திடீரென பீறிட்டு வந்த வெள்ளம்... நூலிழையில் உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள்

அருவியின் நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாசாணி அம்மன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு கோவை ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களின் வருகை அதிகரித்ததை அடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கரைகளை சீரமைக்க நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.22 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து சான்றளிக்க வல்லுநர்களை நியமிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கனமழை எதிரொலி.. திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு... மூழ்கிய தரைப்பாலத்தால் மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் மங்கலம் - கல்லூரி சாலையை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியது. இதையடுத்து தரைப்பாலத்தை பொதுமக்கள் கடக்காமல் இருக்க இரும்பு வேலிகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி குற்றாலம்  சென்ற சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

அமாவாசை வழிபாடு.. சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள்

ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையையொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர். வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்கவும், இரவில் கோயிலில் தங்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழ்நாடு நாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ‘தமிழ்நாடு நாள்’ என அறிவிக்கப்பட்ட நாள் இன்று; தமிழ்நாடு உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தியாக உள்ளங்களையும் இந்நன்னாளில் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.