ஹரியானா குருகிராம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், 29 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரைச் சேர்ந்த ரோகித் லால் (29), புது டெல்லியில் உள்ள இந்தியத் தரக் கவுன்சிலில் பணியாற்றி வந்தார். குருகிராமில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வந்த இவர், நேற்று காலை தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் வழக்கமாக வேலைக்குச் செல்லும் சக ஊழியர், பலமுறை போன் செய்தும் ரோகித் எடுக்காததால் சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அறையில் சிக்கிய மருந்துகள்
தகவல் அறிந்து வந்த போலீசார், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரோகித் தனது படுக்கையிலேயே உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். அந்த அறையைச் சோதனை செய்தபோது, அங்குக் ஏராளமான மருந்து உறைகள் சிதறிக் கிடந்தன. இதுவே அவரது மரணத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதிகப்படியான மருந்தால் மாரடைப்பு?
முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று ரோகித் தனது வருங்கால மனைவியை வீட்டிற்கு அழைத்திருந்தது தெரியவந்துள்ளது. அவர் வருவதற்கு முன்பே, ரோகித் பாலியல் ஊக்க மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்கலாம் என்றும், அதன் விளைவாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இருப்பினும், இது உறுதியான தகவல் இல்லை என்றும், உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாக்பூரைச் சேர்ந்த ரோகித் லால் (29), புது டெல்லியில் உள்ள இந்தியத் தரக் கவுன்சிலில் பணியாற்றி வந்தார். குருகிராமில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வந்த இவர், நேற்று காலை தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடன் வழக்கமாக வேலைக்குச் செல்லும் சக ஊழியர், பலமுறை போன் செய்தும் ரோகித் எடுக்காததால் சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அறையில் சிக்கிய மருந்துகள்
தகவல் அறிந்து வந்த போலீசார், பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரோகித் தனது படுக்கையிலேயே உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். அந்த அறையைச் சோதனை செய்தபோது, அங்குக் ஏராளமான மருந்து உறைகள் சிதறிக் கிடந்தன. இதுவே அவரது மரணத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதிகப்படியான மருந்தால் மாரடைப்பு?
முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று ரோகித் தனது வருங்கால மனைவியை வீட்டிற்கு அழைத்திருந்தது தெரியவந்துள்ளது. அவர் வருவதற்கு முன்பே, ரோகித் பாலியல் ஊக்க மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்கலாம் என்றும், அதன் விளைவாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இருப்பினும், இது உறுதியான தகவல் இல்லை என்றும், உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
LIVE 24 X 7









