K U M U D A M   N E W S

Author : VASUKI RAVICHANDHIRAN

2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் சூரிய பூஜை.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயிலில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.  இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நிர்வாகிகளுடன் வீதிக்கு வந்த தமிழிசை.. போலீசாருடன் வாக்குவாதம்

டாஸ்மாக் முறைகேடு குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி முற்றுகை போராட்டத்திற்கு செல்ல முயன்ற தமிழிசை கைது

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்..!

திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வணங்கினர்.

பட்டுக்கோட்டையில் ஏழு  சிறுவர் சிறுமியர்கள் 8 உலக சாதனை..!

பட்டுக்கோட்டையில் 7 சிறுவர், சிறுமியர்கள் உலக சாதனைப்படைத்த நிலையில், நோபல் நிறுவனத்திலிருந்து இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சமாதான முயற்சி - பிடிகொடுக்காத செங்கோட்டையன்?

3 நாட்களாக சட்டப்பேரவையில் நடைபெறும் எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்து வருகிறார் செங்கோட்டையன்

நள்ளிரவில் பயங்கரம்.. சென்னையில் இரட்டை கொலை..!

சென்னையில் நேற்று நள்ளிரவில் கோயில் வாசலில் படுத்திருந்த இரண்டு ரவுடிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி அருண் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோரை பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம வங்கியில் கொள்ளை முயற்சி.. அலாரத்தால் தப்பிய கொள்ளையர்கள்..!

அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அதிகாலை நேரத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அப்போது வங்கியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா ரீல்ஸ்காக பைக் சாகசம்.. ஆபத்தை நோக்கி இளைஞர்கள்..!

சென்னையில் நாளுக்கு நாள் இளைஞர்களின் இருசக்கர வாகன ரேஸ் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீலிங் செய்வதை இன்ஸ்டாவில் ரீல்ஸ்-ஆக வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் நடந்து கொள்வது அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போன்று உள்ளது.

மொழிக் கொள்கையின் உறுதியைக் காட்டவே “ரூ” குறியீடு - முதலமைச்சர் விளக்கம்..!

தமிழ்நாடு சட்ட்ப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதில் தமிழ் எழுத்து ‘ரூ’-வை அச்சிட்டது ஏன் என்பது குறித்தும், பட்ஜெட் வெளியீட்டிற்கு பின்னர் வெளியான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

'ரூ' பயன்படுத்தியது ஏன்? - முதலமைச்சர் விளக்கம்

மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளோம் என்பதைக் காட்டவே 'ரூ' என்ற வார்த்தை மாற்றம்