K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Sumalekha M

இனி கூட்டணி இல்லை... திமுக தனித்து நிற்கும் ! - ஆ.ராசா

திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக கூட்டணி மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்: 17 பேர் மீது குற்றச்சாட்டு !

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் காணிக்கை பணத்தில் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என எஸ்ஐடி முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பள்ளி சீருடைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு?

காமராசர் கொண்டுவந்த சீருடை முறை சமத்துவத்தை நோக்கியது. இன்று அரசு, தனியார் பள்ளி சீருடைகளில் பெரிய வேறுபாடுகள் உருவாகியுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கதர் சீருடையை அமல்படுத்தினால் சமத்துவமும் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வலியுறுத்தப்படுகிறது.

மோடியை சந்தித்த அமேசான் சிஇஓ... இந்தியாவில் ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு !

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான Amazon நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

NLC பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்பு... மோடிக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம் !

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

ஜனநாயகத்துக்கு எதிரான சவால்... அவசரநிலையை பாடமாக்கிய என்சிஇஆர்டி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், 1975-77 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை (Emergency) குறித்த பாடம் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

தி.நகரில் பயங்கரம்... 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்துக் கொலை!

சென்னை தி.நகர் பகுதியில் சில மணி நேர இடைவெளியில் 2 துப்புரவு தொழிலாளர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்துறைக்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்... பரபரப்பை கிளப்பிய வெள்ளை அறிக்கை !

தமிழ்நாடு மின்துறையின் தற்போதைய நிதிநிலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மின்வாரியத்தின் வருவாய், செலவினம், உள்கட்டமைப்பு, மனிதவள நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் நாளை 5 மணி நேர மின்தடை! உங்கள் பகுதி இருக்கிறதா?

ராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஜூன் 25-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அண்ணாசாலை, குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல பகுதிகள் மின் நிறுத்தம் செய்ய உள்ளன

ஆ.ராசாவுக்கு மனப்பிறழ்வு நோய் ! - வன்னி அரசு காட்டம்

திமுக எம்.பி ஆ.ராசா கூட்டணி கட்சிகளை விமர்சித்த நிலையில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, "ஆ.ராசா மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்" என்று கடுமையாக விமர்சித்ததுடன், அவரை திமுக தலைமை கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.