K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Sumalekha M

ஐரோப்பாவில் உயிர்களை பறிக்கும் வெப்ப அலை.... விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் சரத்குமார் மீது அதிரடி புகார்... காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு !

தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான சரத்குமார் தொடர்பாக புதிய சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார்.

மதுரை–தேனி ரயில் சேவை குறித்து மக்கள் கொந்தளிப்பு: “எங்களுக்கு பயனில்லை” எனக் குற்றச்சாட்டு

மதுரை–தேனி பயணிகள் ரயில் ஒரே பயணமாக இயக்கப்பட்டு பகல் முழுவதும் தேனியில் நிறுத்தப்படுவதால், இரு மார்க்க பயணிகளுக்கும் பயனில்லை என மக்கள் குற்றம்சாட்டி, காலை–மாலை இரு திசைகளிலும் சேவை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு புதிய சிக்கல்? டெல்லி வியூகத்தில் தினகரன்–சசிகலா காம்போ!

எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்ற டெல்லி மேலிடம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன்–சசிகலா கூட்டணி மீண்டும் அதிமுக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், எடப்பாடியே அதிமுகவின் பலம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

“என்னிடம் கெஞ்சினார்” – ட்ரம்ப் பேச்சுக்கு மெலோனியின் அதிரடி பதிலடி!

ஜி7 மாநாட்டைத் தொடர்ந்து இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. அதற்கு மெலோனி கடும் பதிலடி கொடுத்த நிலையில், இந்த விவகாரம் அமெரிக்கா–இத்தாலி உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

பணம் வராமல் தவிக்கும் விவசாயிகள்... நெல் கொள்முதலில் புதிய பிரச்னை!

மத்திய அரசு சார்பில் ஏஜென்ட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்முதலுக்கான பணம் பல மாதங்களாக வழங்கப்படாததால், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்ட விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் அரசியல் ஆட்டமா? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை!

அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கரைகிறதா தி.மு.க.? செந்தில்பாலாஜி மீது அதிகரிக்கும் அதிருப்தி

கோவை தி.மு.க.வில் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் மற்றும் கரூர் ஆதிக்கம் குறித்த அதிருப்தி தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள், சீட் ஒதுக்கீடு மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள், மாவட்டக் கழகத்திற்குள் புதிய உள்கட்சிப் பூசலை உருவாக்கியுள்ளன.

தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ஷாஜகான்... அரசியலில் புதிய சலசலப்பு!

தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.