கல்லீரல் பாதிப்பால் அவதி
ஆயுள் தண்டனைக் கைதியான நாகேந்திரனுக்குக் கடந்த சில காலமாகக் கல்லீரல் பாதிப்பு இருந்து வருகிறது. இதனால், கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முதலே அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைக் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், அவர் மேல் சிகிச்சைக்காகக் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குச் சிகிச்சை பெற்ற பின், மீண்டும் அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலேயே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் குன்றிய நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. வடசென்னையின் முக்கியப் புள்ளியான தாதா நாகேந்திரனின் உடல்நிலை குறித்துப் பரபரப்பு நிலவி வருகிறது.
LIVE 24 X 7









