இது குறித்துச் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தச் சம்பவத்தால் தான் தனிப்பட்ட முறையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராஜ்மோகன் பதிவின் சாராம்சம்
ராஜ்மோகன் தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது, கரூரில் நடந்த துயரச் சம்பவத்தால் தனிப்பட்ட முறையில் நான் அதிகம் பாதிக்கப்பட்டவன். இந்த விவகாரம் தொடர்பாகப் பல வதந்திகள் உலா வருகின்றன. மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான கல்லடிகளை (விமர்சனங்களை) நான் தாங்க வேண்டும், என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அரசு மற்றும் நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், தவெக தரப்பிலிருந்து ஒரு முக்கிய நிர்வாகி முதன்முறையாக இந்த விவகாரம்குறித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது
LIVE 24 X 7









