சாதனை விவரங்கள்:
பணக்காரப் பெண்: ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, இந்தப் பட்டியலில் இந்தியாவின் மிகப் பணக்காரப் பெண்மணி என்ற இடத்தை அடைந்துள்ளார்.தேசிய அளவில் அவர் தனது குடும்பத்துடன் சேர்த்து ரூ.2.84 லட்சம் கோடி நிகர மதிப்புடன், ஒட்டுமொத்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஹுருன் பணக்காரர்கள் பட்டியலின் முதல் மூன்று இடங்களில் ஒரு பெண் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். இது தொழில்நுட்பம் சார்ந்த செல்வம் மற்றும் தலைமைப் பண்பில் பெண்களின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை இது குறிக்கிறது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தை முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ($9.55 லட்சம் கோடி) பெற்றுள்ளனர். கவுதம் அதானி மற்றும் குடும்பத்தினர் ($8.14 லட்சம் கோடி) இரண்டாம் இடத்தில் உள்ளனர். ரோஷ்னி நாடார் 44 வயதில், இந்தப் பட்டியலில் உள்ள டாப் 10 பணக்காரர்களில் இளையவராகவும் உள்ளார்
LIVE 24 X 7









