K U M U D A M   N E W S

ஒரே கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை.. அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ராஜதானிக்கோட்டை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே தமிழக அரசு சிறப்பு முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய கட்சி தொடங்கியவர்கள் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள் - விஜய்க்கு முதலமைச்சர் பதில்

வசவாளர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, எங்கள் பணி மக்களுக்கானது. எல்லோருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

பேருந்து நடத்துநர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்.. வெளியான பதைபதைக்கும் காட்சி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற பேருந்தை நடுவழியில் கை நீட்டி அஜித் என்பவர் நிறுத்தியுள்ளார். பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் ஆத்திரமடைந்த அவர், தன்னுடைய நண்பர்களுடன் வந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பெட்ரோல் குண்டு வீசிய மாணவன்.. தட்டி தூக்கிய போலீஸ்

மதுரை சோழவந்தான் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் முத்தையா என்பவருக்கும் மதன்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த முத்தையா மகன் விக்னேஸ்வரன் மதன்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதையடுத்து மதன்குமார் அளித்த புகாரின்பேரில் விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

காவலரிடம் அநாகரீக பேச்சு... மெரினா ஜோடி தாக்கல் செய்த ஜாமின் மனு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை மெரீனா கடற்கரையில் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு மீண்டும் உடல் நலம் பாதிப்பு - பெற்றோர்கள் வாக்குவாதம்

10 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இதில்  3 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

“புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம்...” விஜய்யை தாக்கி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என தவெக தலைவர் விஜய்யை தாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.   

புதிய கொடிமரம் மாற்ற எதிர்ப்பு.. சிதம்பரம் கோயிலில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் புதிய கொடி மரம் நடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்தது எப்படி?- ஆய்வு அறிக்கை ஒப்படைப்பு

ரயில் பெட்டிகளில் ஜெனரேட்டர்களில் பயன்படுத்தப்படும் டீசல்கள் வெளியேறி இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பேனர் வைத்த போது இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்... ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் சிலை திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர் பொருத்தும்போது பேனரில் இருந்த இரும்பு கம்பி மின்சார ஒயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.