K U M U D A M   N E W S

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - சின்னம் பொருத்தும் பணி ஆரம்பம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது

திருச்சி ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அன்பு என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை - 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!

கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கைதி தற்கொலை செய்து கொண்ட போது பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறை அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

மைனராக இருந்தாலும், கருவை களைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அச்சிறுமியின் 24 வார சிசுவை களைக்க அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ASER கல்வி அறிக்கை: பின்தங்கிய நிலையில் தமிழக  அரசு பள்ளி மாணவர்கள்.. புள்ளி விவரங்கள் வெளியீடு..!

எழுத்துக்களை வாசிப்பதிலும், கண்டறிவதிலும் தமிழக  அரசு பள்ளி மாணவர்கள் தினறுவதாகவும், மேலும் கணித வகுத்தலிலும் பின் தங்கிய நிலை காணப்படுவதாக 2024 ஆம் ஆண்டுக்கான ASER கல்வி அறிக்கையின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

மகா கும்பமேளாவில் நீராட மீண்டும் அனுமதி

மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை நீக்கம்

ஆதிசேது கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பக்தர்கள்

நாகை மாவட்டம் கோடியக்கரை ஆதிசேது கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு.. நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை

காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர்