K U M U D A M   N E W S

மர்மர்: இந்த வருடத்தின் மோசமான ஸ்கேமா? படத்தை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக் என்றால் அது மர்மர் படம் தான். ஒரு பக்கம் இன்ஸ்டா பிரபலங்கள், சில திரை விமர்சகர்கள் படத்தை ஆஹா., ஒஹோனு புகழ்ந்து தள்ளும் நிலையில் இன்னொருப்புறம் படத்தை பார்த்து விட்டு வரும் பார்வையாளர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-வது ஆண்டு விழா.. மோப்ப நாய்களின் ஒத்திகை நிகழ்ச்சி..!

சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 56-வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியில் ஈடுபடும் மோப்ப நாய்களின் ஒத்திகையில் ஈடுபட்டனர். 

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்கள்...அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.    

கடத்தப்பட்ட ரயிலில் 155 பேர் பத்திரமாக மீட்பு.. ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழப்பு

கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ரயிலில் சிக்கி கொண்ட 400 பயணிகளில் 155 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணித்த ராணுவ வீரர்கள், போலீசார் என 30 பேர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 27 பேர் பலியாகினர். தொடர்ந்து ரயில் உள்ள எஞ்சியோரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதய அறுவை சிகிச்சையில் சாதனை - இம்பெல்லா பம்ப் பொருத்தம்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இதயவியல் துறை மருத்துவர்கள் இதயத்தில் இருந்து ரத்தத்தை பம்ப் செய்து உடலின் பிற உறுப்புகளுக்கு அனுப்புவதற்கு தற்காலிகமாக இம்பெல்லா என்ற பொறியியல் சார்ந்த இதய பம்பை பயன்படுத்தி 80 வயது முதியவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.

‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Auto strike: சென்னையில் ஒருநாள் ஆட்டோ ஸ்டிரைக்.. இதுதான் காரணமா?

இரு சக்கர வாகன பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவிற்கு விலக்கு அளிக்க வேண்டும், 12 வருடமாக உயர்த்தாத மீட்டர் கட்டணத்தை நீதிமன்ற உத்தரவுப்படி அரசு உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

ஒரு குப்பை தொட்டி கூட இல்லையா..? அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கன்னியாகுமரியில் குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பை தொட்டி கூட அமைக்காத புகாரில், அரசு அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

துரைமுருகன் மீது இன்றும் அந்த குற்றச்சாட்டு உள்ளது- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

பிஎம்ஸ்ரீ திட்டத்திற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட்டு பள்ளி கல்வித்துறைத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஒப்புதலே கொடுக்கவில்லை என பச்சை பொய் பேசுகிறார்கள் என சாடினார்.

வைகை நதி மாசு -"மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது" - நீதிபதி

வைகை நதி மாசுபடுவதை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு