நெருங்கியது தென்மேற்கு பருவமழை- வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
வங்கக் கடலில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விலை என்ன என்பதை தீவிரவாதிகளுக்கு காட்டி உள்ளோம் என ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவின் முப்படைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் செய்திகள் போல போலி இணைப்புகள் மற்றும் APK கோப்புகள் குறித்து கவனமாக இருக்கும்படி தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று( மே7) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சமூகவலைதளங்களில் நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு 12 மணி ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் 2,229 நிவாரண மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.