K U M U D A M   N E W S

மதுவிலக்கு மாநாடு: திமுகவை எதிர்க்கிறாரா திருமாவளவன்?.. அமைச்சர் முத்துசாமி பதில்!

திருமாவளவன் தனது கருத்தை தெரிவிப்பதற்காக மட்டுமே மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

வாய் பேச்சால் வந்த வினை.. மகாவிஷ்ணுவுக்கு இன்று மிக முக்கிய நாள்!

மகா விஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

மது ஒழிப்பை யார் நினைத்தாலும் செய்ய முடியாது.. ஆனால்.. திமுக அமைச்சர் புது விளக்கம்

மது ஒழிப்பை எந்த கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் முடியாது என்றும் இதனை சமூகத்தில் மாற்றத்தின் மூலமாகத்தான் கொண்டு வரவேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

டி.வி.யில் விளம்பரம்.. காதில் மைக்.. ஆன்மிக குருவுக்கு லட்சணமா? - விளாசும் செல்வராகவன்

தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துக்கிட்டு, மைக்கெல்லாம் வைத்துக்கொண்டு, உங்களுக்கு தியானம் சொல்லித்தருகிறேன் என்று எல்லாம் சொல்லமாட்டார்கள் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

“சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா” - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“இந்திய சீன உறவு சீனாவின் பார்வையில் இருந்து” என்கிற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ராஜ் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கேஷவ கோகலே மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.இயக்குநர் காமகோடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

வேட்டையனுக்கு பிறகு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ரெடி!.. டி.ஜே.ஞானவேலின் பான் இந்தியா படம்..

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள வேட்டையன் திரைப்படம், ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அதன் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மதுவுக்கு எதிரானதா? கூட்டணிக்கு எதிரானதா? - மாநாடு குறித்து சந்தேகம் கிளப்பும் தமிழிசை

திருமாவளவன் நடத்தும் மாநாடு மதுவுக்கு எதிரான மாநாடா? அல்லது கூட்டணிக்கு எதிரான மாநாடா? என்ற சந்தேகம் உள்ளது என்று பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் போராட்டம் - தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாடு முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தொடக்க கல்வித்துறை கூட்டு நடவடிக்கை குழு நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக 30% பேர் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர். 69.4% ஆசிரியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அரசு பணியில் தொய்வு... 4 அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசுப்பணியில் தொய்வு ஏற்படுத்தியதாக 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்

கிறிஸ்தவர் என்பதால்தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? - முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கேள்வி

“கிறிஸ்தவர் என்பதால்தான் அப்பாவு சபாநாயகர் ஆக்கப்பட்டாரா? பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.