K U M U D A M   N E W S

மனுநீதியை மீண்டும் திணிக்கிறார் மகாவிஷ்ணு - செல்வப்பெருந்தகை

மனுநீதியை மீண்டும் திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பேசியிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடுக்கடலில் நேர்ந்த கொடூரம் - வெளியானது திடுக்கிடும் வீடியோ

நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை மீது 2 பிரிவுகளின் கீழ் வேதாரண்யம் காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

5 நிமிடங்களில் விற்றுதீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்.. பொங்கல் பண்டிகை முன்பதிவில் மாற்றுத்திறனாளிகள் அவதி

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கிய நிலையில், 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது.

சொற்பொழிவு மூலம் மகா விஷ்ணுவுக்கு பணம்.. வெளிநாட்டு பரிவர்த்தனை குறித்து விசாரணை

சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட மகா விஷ்ணுவிடம், வெளிநாட்டு பணபரிவர்த்தனை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING NEWS : கோயில் முன்பு காவலர் அநாகரீக செயல் - வைரல் வீடியோ

விருத்தாச்சலம் தலைமை காவலர் பாக்யராஜ் மது போதையில் கோயில் முன்பு அநாகரீக செயலில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பு. வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ரோந்து பணியில் ஈடுபடாமல் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது

BREAKING NEWS : திருப்பூருக்கு அழைத்து செல்லப்படும் மகாவிஷ்ணு

3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூருக்கு அழைத்து சென்றுள்ளனர். பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்தில் வைத்து மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர்

#JUSTIN || பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு - பயணிகள் காத்திருப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம். சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையத்தில் குவிந்த பொதுமக்கள்

தொடங்கியது டிக்கெட் முன்பதிவு.. அதிகாலையிலேயே ரயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியதை அடுத்து, சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காலை முதலே அதிகளவில் குவிந்தனர்.

மாணவர்களுக்கு இச்சை தொல்லை!! ஆசிரியர்களே அத்துமீறிய கொடூரம்

நெல்லையில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தவெக மாநாடு அறிவிப்பு- "இந்த நாள் தான்..?"

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு தொடர்பான முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று காலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.