K U M U D A M   N E W S

தொடர் கனமழை எதிரொலி... சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

கோவையில் தொடர் கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.61 அடியில் தற்போது நீர்மட்டம் 43.49 அடியாக உள்ளது.

சுங்கச்சாவடியில் தேங்கிய மழைநீர்... மிதந்து செல்லும் வாகனங்கள்

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. 7 கவுன்ட்டர்கள் உள்ள நிலையில் மழை நீர் தேக்கம் காரணமாக 2 கவுன்ட்டர்கள் வழியாக மட்டுமே வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்தபடி செல்கின்றன.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அம்மா உணவகங்களில் இலவச உணவு

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்...7.18 லட்சம் உணவு பொட்டலங்களை வழங்கிய அரசு

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7.18 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

கனமழை எதிரொலி... தத்தளிக்கும் பெங்களூரு

தமிழகத்தை போன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூர் மாநகராட்சி அலுவல கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி

பல்வேறு இடங்களில் பெய்த கனமழை... மக்கள் அவதி

மக்களுக்கு பகீர் செய்தி... நெருங்கியது புயல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 360 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது

மேம்பாலத்தில் பார்க் செய்யப்பட்ட வாகனங்கள்... சென்னை மக்களுக்கு வெதர்மேன் சொன்ன நல்ல செய்தி

சென்னைக்கு இன்று கனமழை அபாயம் இல்லை. மிதமான மழைக்குதான் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.

கடந்த 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா... எங்க அதிக மழை தெரியுமா? முழு விவரம் உள்ளே!

சென்னையில் அக்.15 காலை 6 மணி முதல் அக்.16 காலை 6 மணி வரை பதிவாகியுள்ள மழை அளவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.